திருவனந்தபுரம்:

இளம் வக்கீல்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு கேரளா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சட்டப்படிப்பு முடித்து 3 ஆண்டுகளுக்கு குறைவாக பயிற்சி பெறும் வக்கீல்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் உதவித் தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

3 மாதத்திற்கு ஒரு முறை 15 ஆண்டு அனுபவம் பெற்ற மூத்த வக்கீலிடம் இருந்து பயிற்சியில் தொடர்வதற்கான உறுதி பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும். கேரளா வக்கீல்கள் நல நிதி சட்டம் 1980ன் படி இதற்கான சட்டப்பூர்வ கட்டமைப்பை ஏற்படுத்த கேரளா அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.