கோழிக்கோடு: கேரளாவில் கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அழைத்து வரப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை அழைத்து வந்தே பாரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், வெளிநாட்டில் இருந்தவர்களை அழைத்துக் கொண்டு ஏர் இந்தியா விமானம் ஒன்று கேரளா வந்தது.

அந்த விமானத்தில் 191 பயணிகள் இருந்தனர். விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் இறங்கிய போது திடீரென சறுக்கியதால் விபத்து ஏற்பட்டது. ஓடுதளம் நோக்கி வந்து கொண்டிருந்த போது 35 அடி உயரத்தில் விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானம் 2ஆக உடைந்தது. இதையடுத்து, அதில் இருந்த 191 பயணிகளையும் மீட்கும் பணிகள் நடைபெற்றுள்ளன. அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டதாக தெரிகிறது. விபத்தில் விமானி ஒருவர் பலியாகி உள்ளார்.