திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் 6,477 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கேரளாவில் சில வாரங்களாக கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,477 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,481 பேர் குணம் பெற்றுள்ளனர்.  இன்னமும் 48,982 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக கொரோனாவில் இருந்து 1 லட்சத்து 11 ஆயிரத்து 331 பேர் மீண்டுள்ளனர்.