திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 7,283 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:  புதியதாக 7,283 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 3,25,213 ஆக அதிகரித்து உள்ளது.
சிகிச்சை பெறுபவர்களில் மேலும் 24 பேர் உயிரிழக்க மொத்த பலி எண்ணிக்கை 1,113 ஆக உயர்ந்துள்ளது.  இன்று 6,767 பேர் குணமடைய ஒட்டு மொத்தமாக 2,28,998 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 95,008 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.