திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் இன்று மட்டும் 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இந்தியாவில் கேரளாவில் தான் முதன்முறையாக பரவியது. நாட்டின் பல பகுதிகளில் பரவலாக பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கேரளாவில் பெருமளவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.

இந் நிலையில், 6வது நாளாக தொடர்ந்து பாதிப்பு 100ஐ கடந்து உள்ளது. இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுவரை இல்லாத வகையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது ஒரு நாளில் மிக அதிக எண்ணிக்கை ஆகும்.

தொடர்ந்து 6வது நாளாக இன்று, நாளொன்றுக்கு 100 எண்ணிக்கையை விட கூடுதலாக பாதிப்பு பதிவாகி உள்ளது. கேரளாவில் இதுவரை 3,603 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. 1,691 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

கேரளாவில் பதிவான கொரோனா பாதிப்புகளில் 90 சதவீதத்தினர் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.