திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 7,354 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் ஒரே நாளில்  பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டுவது இது 3வது முறையாகும். கொரோனா பாதிப்புடன் 61 ஆயிரத்து 791 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரளாவில் இன்று ஒருநாளில் மட்டும் 3,240  பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.  தொற்று பாதிப்பால் இன்று 22 பேர் மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.