ப்ஷி, நைஜீரியா

போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுவிக்கபட்டு வீட்டுக்கு திரும்பினர்.

நைஜீரியாவில் டப்ஷி பகுடியில் உள்ள ஒரு பள்ளியில் போகா ஹராம் தீவிரவாதிகள் கடந்த மாதம் தாக்குதல் நடத்தினர்.   அப்போது அந்தப் பள்ளியில் இருந்து அவர்கள் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கடத்தப்பட்டனர்.    அவர்களை மீட்க  நைஜீரிய அரசு கடும் முயற்சி செய்து வந்தது.   ஆயினும் அவர்கள் மீட்கப்படாமல் இருப்பதாக கூறப்பட்டது    இதையொட்டி நைஜீரிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று அந்த மாணவிகள் விடுவிக்கப்பட்டு வீடுகளுக்கு திரும்பியதாக தகவல்கள் வெளியாகின.   அந்த தகவலை மாணவிகளின் பெற்றோர்கள் உறுதி செய்துள்ளனர்.   அந்த மாணவிகள் இன்று காலை நைஜீரிய நேரப்படி 8 மணி அளவில் பள்ளியின் வாசல் அருகே 9 வாகனங்களில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.   கடத்தப்பட்ட மாணவிகல் ஐந்து பேர் மரணம் அடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.