புதுடெல்லி: டெஸ்ட் தொடரில் கோலி இல்லாத சூழலில், புஜாரா மற்றும் கேஎல் ராகுல் சிறப்பாக செயல்படுவர் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

முதல் டெஸ்ட் போட்டியுடன், கேப்டன் கோலி நாடு திரும்புவது குறித்து பேசியுள்ள ஹர்பஜன் கூறியுள்ளதாவது, “உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் குவிக்கக்கூடியவர். அதேசமயம், இவர் இடையிலேயே நாடு திரும்பும் வெற்றிடத்தை, புஜாரா மற்றும் கேஎல் ராகுல் நிரப்புவர்.

கடந்தமுறை போன்றே, இந்தமுறையும் ஆஸ்திரேலிய மண்ணில், புஜாரா சிறப்பாக செயல்படலாம். இதுதவிர, தனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பை ராகுலும் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

கோலி இல்லை என்பது குறித்து இந்திய வீரர்கள் நினைக்கக்கூடாது. வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட வ‍ேண்டும். மேலும், ரோகித் ஷர்மாவும் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்” என்றார் ஹர்பஜன்.