அபுதாபி: ஐபிஎல் 2020 தொடர் முடிவடைந்துவிட்ட நிலையில், பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல், மொத்தமாக 670 ரன்களை எடுத்து சாதித்துள்ளார்.

மொத்தம் 14 போட்டிகள் மட்டுமே ஆடிய அவர், இந்த சாதனையை செய்துள்ளார் என்பதை கவனிக்க வேண்டும். இதில் 132 ரன்கள் என்ற ஒரு பெரிய சதம் அடக்கம். மேலும் 5 அரை சதங்களும் அடக்கம். இவர் இந்த தொடரில் ஆரஞ்சு தொப்பி பெற்றார்.

இரண்டாவது இடத்தில் 618 ரன்களுடன் இருப்பவர், டெல்லி அணியின் ஷிகர் தவான். இவர் மொத்தம் 17 போட்டிகளில் ஆடி, 2 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களுடன் இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளார்.

மூன்றாவது இடத்தில் இருப்பவர் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர். இவர் மொத்தம் 16 ஆட்டங்கள் ஆடி 548 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் 4 அரைசதங்கள் அடக்கம்.