கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கும் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதனால் ரோஹித் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை.

ஆகவே இந்திய அணிக்கு ரோகித் ஷர்மா தலைவராக செயல்படுகிறார். சமீபத்தில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் விளாசினார் ரோகித். இதையடுத்து ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 முறை இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 

இந்த நிலையில் ரோகித் ஷர்மா கடந்த 12ம் தேதி டிவிட்டரில் அனுஷ்கா, கோஹ்லி தம்பதிக்கு திருமண வாழ்த்து தெரிவித்திருந்தார். கணவருக்கான கையேடு தன்னிடம் உள்ளதாகவும், அதை ஷேர் செய்ய தயார் என்றும் கேலியாக குறிப்பிட்டிருந்தார் ரோஹித். ஏனெனில் இவருக்கு 2 வருடம் முன்பே திருமணமாகி விட்டது.

இதை பார்த்த கோஹ்லி, இன்று அந்த ட்விட்டுக்கு பதில் அளித்துள்ளார். அதில், “ஹாஹாஹா, நன்றி ரோஹித். அப்படியே, டபுள் செஞ்சுரி கையேட்டையும் எனக்கு ஷேர் செய்யவும்” என்று தெரிவித்துள்ளார்.

கோஹ்லி இதுவரை ஒருநாள் போட்டியில் டபுள் செஞ்சுரி அடித்தது இல்லை.

இந்த டிவிட்டுகள், நெட்டிசன்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக அனுஷ்கா ஷர்மாவும் ரோகித்துக்கு நன்றி தெரிவித்திருந்தார். சிறப்பான ஆட்டம் என ரோகித்தின் டபுள் செஞ்சுரியை அனுஷ்கா பாராட்டியிருந்தார்.

தென் ஆப்பிரிக்க தொடரில் கோஹ்லி விளையாட இருக்கிறார். தற்போது மனைவியுடன் அவர் வெளிநாடுகளில் தேனிலவில் இருக்கிறார்.