கோலி – சச்சின்

கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டம்தான், இந்திய  கிரிக்கெட் அணியின் பலமாக மாறி இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட்டின் ஸ்டார் வீரர்களில் ஒருவரா விளங்கிய சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி  அசத்தலான சதம் அடித்தார்.  இது அவரது இருநூறாவது போட்டியாகும்.

 

இந்த சதத்தின் மூலம், 192-வது இன்னிங்சில்  தனது 31-வது சதத்தை கோலி எட்டினார்.  மேலும், ஒருநாள் போட்டியில் அதிக சதமடித்து இரண்டாவது இடத்தில் இருந்த ரிக்கி பாண்டிங்கை பின்தள்ளினார். சச்சின் தெண்டுல்கர் 49 சதம் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார்.

 

இந்த நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார். அப்போது அவர்,  விராட் கோலி 2008-ம் ஆண்டில் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். அப்போது முதலே அவர் கடும் ஆக்ரோஷ்த்துடன் விளையாடி வருகிறார்.  அப்போது மூத்த வீரர்கள் சிலர் கோலி ஆக்ரோஷ ஆட்டத்தை கைவிட வேண்டும்  என்று ஆலோசனை கூறினர்.

ஆனால், கோலி  தனது வழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல்
அப்படியே விளையாடினார். தற்போது  அவரது ஆக்ரோஷமே இந்திய அணியின் பலமாக அமைந்திருக்கிறது.

தற்போது  இந்திய அணியில் சிறந்த ஸ்பின் பவுலர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். . புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் ஆட்டத்தின் போக்கை தங்களுக்கு சாதகமாக மாற்றும் திறமை படைத்தவர்களாக இருக்கிறார்கள்: என்று சச்சின் பாராட்டினார்.