ஐதராபாத்: ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமென்ற இந்தியாவின் நீண்டகால கனவை விராத் கோலியின் அணிதான் சாதித்தது என்று புகழ்ந்துள்ளார் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் விவிஎஸ் லட்சுமண்.

அவர் கூறியுள்ளதாவது, “இந்த 2019ம் ஆண்டு இந்தியக் கிரிக்கெட்டிற்கு சிறப்பானதொரு ஆண்டு. ஒரு முன்னாள் டெஸ்ட் வீரர் என்ற முறையில், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமென்பது எனது நிறைவேறாத கனவாக இருந்தது.

ஆனால், அதை விராத் கோலியின் தலைமையிலான அணி சாதித்தது. அவர்கள், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியர்களை வீழ்த்தி கோப்பை வென்றனர். என்னைப் பொறுத்தவரை, இது இந்தியக் கிரிகெட்டின் சிறப்பான தருணமாகும்” என்றுள்ளார் லட்சுமண்.

இதுதொடர்பாக கருத்துக்கூறியுள்ள இந்தியாவின் முன்னாள் ஸ்விங் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான், ஆஸ்திரேலிய டெஸ்ட் வெற்றிக்காக, இந்திய வேகப்பந்து கூட்டணி சிறப்பாக புகழ்ந்துள்ளார்.

இந்தாண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்த இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் முதன்முறையாக அந்த மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது.