sai-pallavi

மணிரத்தினம் முதல் புதுமுக இயக்குநர் வரை சாய்பல்லவியை கேலிவுட்டில் நடிக்க அழைத்தும் நான் நல்ல கதைகளில் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறிவந்தவர். தற்போது சந்தானம் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.

செல்வராகவன் சந்தானத்தை வைத்து படம் இயக்க போகின்றார் என்று செய்தி வந்ததும் அடிச்சதுடா சந்தானத்துக்கு பம்பர் சான்ஸ் அப்படின்னு சிலரும், சந்தானத்துக்கு மாபெரும் சருக்கல் காத்திருக்கு அப்படின்னு சிலரும் கிசு கிசுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த திரைப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக சாய்பல்லவியை அனுகியுள்ளார் இயக்குநர். கதையை கேட்ட சாய்பல்லவி இன்னும் இரண்டு நாட்களில் பதிலை கூறவுள்ளாராம்.

அப்படி சாய்பல்லவி மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டால் இவர் கோலிவிட்டில் நடிக்கும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும்.