புதுடெல்லி: ஆன்லைன் செஸ் தொடரில், தான் பங்கேற்ற முதல் சுற்றில் வீராங்கனை கோனேரு ஹம்பி வெற்றிபெற்ற நிலையில், விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்துள்ளார்.
இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ரெஸ்ட் ஆஃப் வேர்ல்டு ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் ஆன்லைன் செஸ் கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், உலகளாவிய அளவில் பல முன்னணி வீரர் – வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இத்தொடரின் முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனையை எதிர்த்து மோதிய இந்தியாவின் கோனேரு ஹம்பி, 42வது சுற்றில் வெற்றிபெற்றார்.
ஆனால், தங்கள் முதல் சுற்றுகளில் மோதிய இந்திய வீரர்களான ஆனந்த் மற்றும் ஹரி கிருஷ்ணா ஆகியோர் போட்டிகளை டிரா செய்தனர்.