சென்னை:

டந்த மார்ச் மாதம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் குற்றவாளி என்று என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், தண்டனை விவரம் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.

கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த பன்னிமைடை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 1ம் வகுப்பு படிக்கும் 6வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். சம்பவத்தன்று அந்த சிறுமி காணாமல் போன நிலையில், அவரை பல இடங்களில் தேடிய நிலையில் வீட்டின் பின்புறத்தில் மறுநாள் காலை சிறுமி துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இது பெரும் பரபரப்பையும், மக்களிடையே ஆத்திரத்தையும் ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக,  தொண்டா முத்தூரை சேர்ந்த மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சந்தோஷ்குமார் என்பவரை  போலீசார் கைது செய்தனர்.

சிறுமியின்  பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து மூச்சு திணறடித்து கொலை செய்தது தெரியவந்தது.

இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், விசாரணை நடைபெற்று வந்தது. இதில், சந்தோஷ்குமார் தான் என்பது நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கான தண்டனை விவரம் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.