நெட்டிசன்:

சிராஜுல்ஹஸன் முகநூல் பதிவு

தந்தை பெரியார் திராவிடர் கழகம் எனும் அமைப்பு, “பன்றிகளுக்குப் பூணுல் போடும் போராட்டத்தை” அறிவித்துள்ளது.

எந்த ஒரு மதத்தையும் பிரிவினரையும் மதரீதியாகப் புண்படுத்துவதை நாம் ஏற்பதற்கில்லை. ஆகவே இந்தப் போராட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அதே சமயம் தபெதி கழகத்திற்குப் பதில் சொல்லியுள்ளார் எஸ்.வி.சேகர். தபெதி கழகத்திற்கு அவர் எவ்வளவு ஆக்ரோஷமாக வேண்டுமானாலும் பதில் சொல்லட்டும். அது அவருடைய உரிமை.

ஆனால் போகிற போக்கில், எஸ்.வி சேகர் வரம்பு மீறி, “பன்றிக்குக் குல்லா போடுகிறேன்…சுன்னத் செய்கிறேன் என்று இவர்களால் அறிவிக்க முடியுமா?” என்று துடுக்குத்தனமாகக் கேட்டுள்ளார்.

எஸ்.வி. சேகருக்கும் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பிட்ட அமைப்பு பூணூல் கலாச்சாரத்தை இழிவுபடுத்துகிறது எனில் அந்த அமைப்புக்குப் பதிலடி கொடுத்து எதிர்ப்பு தெரிவிக்கட்டும். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் ஏன் இழுக்கவேண்டும்?

இந்தப் போக்கு எஸ்.வி. சேகரிடம் மட்டுமல்ல, பல அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள் போன்றோரிடமும் இருக்கிறது.

யாரேனும் ஒரு தலைவர் அல்லது ஓர் அமைப்பு கீதையை விமர்சித்துப் பேசினால் அல்லது எழுதினால் அதற்குப் பதில் சொல்ல வருபவர்கள், “துணிவிருந்தால் குர்ஆனை விமர்சித்துப் பார்” என்று பிரச்னையில் தொடர்பே இல்லாத குர்ஆனையும் முஸ்லிம்களையும் இழுத்துவிடுவார்கள்.

பன்றிகளுக்குப் பூணூல் போடும் போராட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அதற்கு எதிர்வினையாக இஸ்லாத்தைத் தொடர்புபடுத்தி, எஸ்வி சேகர் சொன்ன கருத்துகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
-சிராஜுல்ஹஸன்