டெல்லி: ஆயுள் தண்டனை கைதியான தர்மேந்திர வால்வி ஜாமின் கேட்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, கிருஷ்ணர் ஜெயிலில் பிறந்தார், உங்களுக்கு பெயில் வேண்டுமா? அல்லது ஜெயில் வேண்டுமா என நகைச்சுவையுடன் கூறினார்.

காங்கிரஸ்  கட்சி உறுப்பினரான  தர்மேந்திர வால்வி மற்றும் ஐந்து கட்சித் தொழிலாளர்கள் 1994 ல் பாஜகவைச் சேர்ந்த ஒரு அரசியல் எதிரியைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். இது விசாரணை நீதிமன்றத்தால் செப்டம்பர் 2017 இல் உறுதி செய்யப்பட்டது.

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான அவர் தாக்கல் செய்த மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணை கிருஷ்ணர் பிறந்த நாளான நேற்று  விசாரணைக்கு வந்தது.

விசாரயின்போது, இந்திய தலைமை நீதிபதி (சிஜேஐ) பாப்டே,  இன்று பகவான் கிருஷ்ணர் பிறந்த நாள். அவர் சிறைக்குள் பிறந்தவர் என்று நம்பப்படுகிறது. “உங்களுக்கு ஜாமீன் அல்லது சிறை வேண்டுமா?  நீங்கள் சிறையை விட்டு வெளியேற விரும்புகிறீர்களா? ”என நகைச்சுவையுடன் கேள்வி எழுப்பினார் .

அதற்கு வழக்கறிஞர் பெயில் வேண்டும் என உறுதிமொழியில் பதிலளித்தார். பின் பெயில் வழங்குவதற்கு முன், மதம் என்பது நீங்கள் மிகவும் இணைக்கப்பட்ட ஒன்றல்ல என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தெரிவித்தார்.

இதையடுத்து,  மேல்முறையீட்டாளர், தர்மேந்திர வால்வி, ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்ட உச்சநீதி மன்றம்,   ரூ .25,000 தொகையில் ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அதுபோல மேலுமை இரண்டு நபர் ஜாமின் கொடுக்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டது.