கிருஷ்ணகிரி
திமுக கிருஷ்ணகிரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் செங்குட்டுவனுக்கு கொரோனா  தொற்று உறுதி ஆகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  இதை கட்டுப்படுத்த மாவட்ட அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.  எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.   அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்யப்படுகின்றனர்.
பாதிப்புள்ளோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதுடன் அனைத்து பகுதிகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றன.   இந்த சோதனை நடவடிக்கையில் கிருஷ்ணகிரி திமுக  சட்டப்பேரவை உறுப்பினர் செங்குட்டுவனுக்கு கொரோனா பரிசோதனை நடந்து அவருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதையொட்டி ஓசூரில் உள்ள காவிரி மருத்துவ்மனையில் செங்குட்டுவன் தீவிர சிகிச்சப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.    அவர் வசித்த பகுதியில் தடுப்புக்கள் அமைக்கபட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுள்ளது.  அதை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளும் கிருமி நாசினியல தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.