சங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘அந்நியன்’. இந்தப் படத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் ‘அந்நியன்’ படத்தை நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், பென் ஸ்டுடியோ தயாரிக்க இருப்பதாகவும் நேற்று (14.04.2021) இயக்குநர் சங்கர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ‘அந்நியன்’ படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ”‘அந்நியன்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இயக்குநர் ஷங்கர் முறையான அனுமதி பெறவில்லை. ‘அந்நியன்’ படத்திற்காக சுஜாதா எழுதிய கதையை பணம் கொடுத்து நான் வாங்கி வைத்துள்ளேன். கதை உரிமம் என்னிடம் உள்ள நிலையில், எனது அனுமதியின்றி ‘அந்நியன்’ படத்தை ரீமேக் செய்வது சட்டவிரோதம்” என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் ‘அந்நியன்’ திரைப்படத்தை இந்தியில் தயாரிக்கும் பென் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனத்திற்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.