பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்திக்கு போதைப் பொருள் விற்பனைக் கும்பலுடன் தொடர்பு இருந்தது தெரியவந்ததால் ரியா சக்கரவர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக் உட்பட 12-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் என்சிபி சம்மன் அனுப்பி வருகிறது.

இந்நிலையில் இயக்குநர் கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்‌ஷன்ஸ் முன்னாள் நிர்வாகி க்‌ஷிஜித் ரவி பிரசாத் என்பவரிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று பல மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் க்‌ஷிஜித் ரவி பிரசாத் கைது செய்யப்பட்டார்.