பெங்களுரூ:
ர்நாடகாவில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.


அகில இந்திய காங்கிரஸ் கட்சி நேற்று முன்னாள் அமைச்சர் டிபி ஜெயச்சந்திரா மற்றும் மறைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டிகே ரவியின் மனைவி எச் குசுமா ஆகியோரை கர்நாடகாவின் சிரா மற்றும் ராஜேஸ்வரி நகாரா சட்டமன்ற தொகுதிகளில் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல உறுப்புகள் செயலிழக்கபட்டதன் காரணமாக சட்டமன்ற உறுப்பினர் டீ சத்தியநாராயணா உயிரிழந்ததால் தும்காரு மாவட்டத்திலுள்ள சிரா தொகுதியில் தற்போது தேர்தல் நடைபெறுகிறது.

ஆர் ஆர் நகாராவின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான முனிரத்தினம் நாயுடு காங்கிரசிலிருந்து ராஜினாமா செய்து ஆளும் பாஜகவுக்கு சென்றுள்ளார். மறைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியான குசுமா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக அக்டோபர் 16-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, நவம்பர் 10-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்த பின்பும் பாஜக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் மெத்தனமாக உள்ளது.