பெங்களூரு:

விவசாய கடன்களை நிச்சயமாக தள்ளுபடி செய்வேன். இல்லாவிட்டால் பதவி விலகுவேன் என்று கர்நாடகா முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்காக கர்நாடக தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணியளவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு விவசாய சங்கங்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகளுக்கு அரசு அழைப்புவிடுத்துள்ளது.