டில்லி:

கர்நாடகா முதல்-வர் குமாரசாமி டில்லியில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். மோடிக்கு மாலை அணிவித்து பூச்செண்டு கொடுத்தார்.

முதல்வராக பதவி ஏற்ற பின்னர் மரியாதை நிமித்தமாக அவர் பிரதமரை சந்தித்துள்ளார். அப்போது பிரதமர் பதவியில் 4 ஆண்டுகள் நிறைவு செய்ததற்காக குமாரசாமி வாழ்த்து தெரிவித்தார்.