சுவாமிமலை:
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைப்பது குறித்த திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி நீண்ட காலமாக கும்பகோணம் பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய மாவட்டம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் உதயகுமார் உறுதி அளித்திருந்த நிலையிலும், இதுவரை அறிவிப்பு வெளியாக வில்லை.

இந்நிலையில், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைப்பது குறித்த திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கிராமங்கள், மக்கள் தொகை உள்ளிட்ட விபரங்கள் கணக்கிடப்பட்டு வருகிறது என்றும், காலம் கனியும் போது மாவட்டம் உதயமாகும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.