எம்.ஜி.ஆராக அரவிந்த் சுவாமி நடித்துள்ள தலைவி படம் இந்த மாதம் வெளியாக வேண்டியது. கொரோனா காரணமாக அதன் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.

அதேபோல் வணங்காமுடி படமும் பாதியில் நிற்கிறது. கள்ளபார்ட் படம் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் நிலையில் உள்ளது.

இது தவிர தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் தயாராகும் படத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இதில் அவருடன் முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் குஞ்சாகாபோபன் நடிக்கிறார். பெல்லினி இயக்கும் இந்தப் படத்துக்கு தமிழில் ரெண்டகம் என்றும் மலையாளத்தில் ஓட்டு என்றும் பெயர் வைத்துள்ளனர்.

படம் ஏறக்குறைய முடிவடைந்த நிலையில், ஆகஸ்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ரெண்டகம் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா என்பது கூடுதல் தகவல்.