சென்னை:

சோழிங்கநல்லூர்  அருகே உள்ள  ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்த  பெண் என்ஜினீயரை தாக்கிய வழி பறி செய்த விவரகாரத்தில்  கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

ஐடி ஊழியர் லாவண்யாவைத் தாக்கிய கொள்ளையன் உள்பட 11 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 12-ந் தேதி இரவு லாவண்யா என்ற ஐடி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த  இளம்பெண் பெரும்பாக்கத்தை அடுத்த நுங்கம் பாளையத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு வந்துகொண்டிருந்தார். அப்போது, அவரை தொடர்ந்து வந்த கொள்ளை யர்கள், லாவண்யா தலையில் இரும்பு கம்பியால் தாக்கி அவரிடம் ஓட்டி வந்த மொபட்டையும் பறித்துச் சென்றனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் தலையில் தாக்கப்பட்டதால், லாவண்யா கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த விசாரணையில், இந்நிலையில் இதுகுறித்த விசாரணையில், லாவண்யா, ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் என்பதும், சென்னை நாவலூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் கொள்ளையர்களை பிடிக்க வலை வீசினர். அப்போது, கொள்ளை யர்கள் பறித்துச் சென்ற மொபட்  செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு அருகே கிடந்தது.

அதை மீட்ட போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா உதவியுடன் கொள்ளையர்களை கைது செய்தனர்.

இந்நிலையில், இந்தகொடூர சம்பவத்தில் தொடர்புடைய விநாயகமூர்த்தியை குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் வைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், கடந்த மாதம் குமரன் நகர் காவல் எல்லையில் கேபிள் டிவி ஆப்பரேட்டர் கந்தன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகளான படப்பை பாஸ்கர், காலா வினோத், சுரேஷ், சோத்துப்பானை என்கிற மணிகண்டன், சரவணன், நேதாஜி ஆகிய 6 பேர் உட்பட மொத்தம் 11 பேரையும், குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் வைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.