ந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் சர்சையை கிளப்பிவிட்டு பாலிவுட் போதை பொருள் விவகாரத்தை ஊதி பெருக்கி மகராஷ்ட்டிரா மாநில அரசை ஆளும் சிவசேனா கட்சி மீது வசை மாறி பொழிந்து வருகிறார் கங்கனா ரனாவத். மும்பையை பாகிஸ்தான் ஆக்ரமித்த காஷ்மீர் என்று மகாராஷ்டிரா அரசை தாக்கிப்பேச அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதனால் தனக்கு ஆபத்து என்ற கூறி மத்திய பாஜ அரசிடமிருந்து ஒய் பிளஸ் கமாண்டோ பாதுகாப்பு பெற்றார் கங்கனா.


தற்பொது கமாண்டோ படைகள் புடை சூழ மும்பையில் ஸ்டைலாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறார் கங்கனா . இந்நிலையில் நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில், நான் வரி கட்டுகிறேன் யாரோ எக்ஸ் அண்ட் ஒய்க்கு பாதுகாப்பு தரப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
குஷ்புவின் இந்த டிவிட் மெசேஜ் பலரையும் ஈர்த்து லைக்குகளை பெற்று வருகிறது.