ண்ணை வளம் கொழிக்கும் குவைத்தில் , சுமார் 14 லட்சம் இந்தியர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.
குவைத் நாட்டில், சொந்த மண்ணின் மைந்தர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் அங்கு வேலை பார்க்கும் வெளிநாட்டு ஆட்கள் எண்ணிக்கையை குறைக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக குவைத்தில் மொத்தமுள்ள மக்கள் தொகையில் 15 சதவீத இந்தியர்கள் மட்டுமே வேலை பார்க்கலாம் என புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர உத்தேசித்துள்ளது.
இந்த சட்ட மசோதாவுக்கு குவைத் நாடாளுமன்ற சட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா விரைவில் மற்றொரு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அந்த குழுவும், மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி விட்டால், அங்கு வேலை பார்க்கும் இந்தியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்படும்.
புதிய சட்டத்தின் படி குவைத்தில் வேலை பார்க்கும் சுமார் 8 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
-பா.பாரதி.