குவைத்

குவைத்தில் பணி புரிய வரும் வெளிநாட்டவர்களில் சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், புற்று நோய் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபு நாடுகளில் குவைத் நகரில் வெளிநாட்டினர் பலர் பணி புரிந்து வருகின்றனர்.   அவர்களுக்கு பணி புரிய அனுமதி அளிக்க அரசு சில கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.   இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரி மஜிதா அல் கத்தான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் ”குவைத் நகரில் பணிபுரிய வரும் வெளிநாட்டினருக்கு சில கட்டுப்பாடுகள் வெளியிட்டுள்ளோம்.   அதன் படி சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், புற்று நோய் உள்ளிட்ட 22 வகை நோய் உள்ளவர்களுக்கு பணி புரிய அனுமதி வழங்கப்பட மாட்டாது.    பணிபுரியும் வெளிநாட்டினரால் மருத்துவச் செலவு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.” என கூறப்பட்டுள்ளது.