மும்பை:

பிஎல் தொடரின் 9வது ஆட்டம் இன்று மும்பை மொகாலியில் நடைபெற்றது. இன்றைய போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், 8விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, மும்பை அணி பேட்டுடன் களமிறங்கியது.

மும்பை அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும்  களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடி வந்தனர். 18 பந்தில் 32 ரன் எடுத்த நிலையில் ரோகித் சர்மா அவுட்டாகி வெளியேறினார். அதையடுத்து சூர்ய குமார் களமிறங்கினார்.   குயிண்டன் அதிரடியாக ஆட்டம் காண்பித்தார். அவர் 39 பந்தில் 60 ரன் எடுத்த நிலையில், வெளியேற யுவராஜ் களமிறங்கினார். குயிண்டன் 2 சிக்சர், 4 பவுண்டர்கள் எடுத்திருந்தார். ஆனால், தொடர்ந்து விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. சூர்யகுமார் யாதவ் 11 ரன்னில் வெளியேறினார். யுவராஜ் சிங், 18 ரன்னிலும், பொலார்டு 7 ரன்னிலும், குருணால் பாண்டியா 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் ஹர்திக் பாண்டியா 19 பந்தில் ஒரு சிக்சர், 3 பவுண்டரியுடன் 31 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்தது.  பஞ்சாப் அணி சார்பில் முருகன் அஸ்வின், ஷமி, வில்ஜோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஆன்ட்ரு டை ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தையடுத்து 177 ரன் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி அதிரடியாக ஆடத் தொடங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக  இறங்கிய லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெயிலும் மும்பை பவுலர்களின் பந்துகளை அடித்து தூள் கிளப்பினர். அணியின் ரன்  53 ஆக இருந்தபோது, குருணால் பான்டியா பந்தை தூக்கி அடிக்க, அதை ஹர்திக் பாண்டியா கேட்ச் பிடித்தார். இதன் காரணமாக கெயில் களத்தை விட்டு வெளியேறினார். கெயில் 24 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர் உடன் 40 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து இறங்கிய மயங்க் அகர்வாலும் அடித்து விளையாடி ரன்களை மளமளவென உயர்த்தினார். இந்த நிலையில், அவர்  21 பந்தில் 2 சிக்சர், 4 பவுண்டரி யுடன் 43 ரன்னில் அவுட்டாகி வெளியேறிய நிலையில்,  தொடர்ந்து  மில்லர் இறங்கினார்.

இறுதியில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 18.4 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது.

லோகேஷ் ராகுல் 57 பந்தில், ஒரு சிக்சர், 6 பவுண்டரியுடன் 71 ரன்கள் எடுத்திருந்தார். மில்லர் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.