சென்னை:

 ‘லஷ்மன் ஸ்ருதி’  என்ற பெயரில்  இசை கச்சேரி நடத்தி பிரபலமானவர், ராமன்.  இவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல மேடை இசைக்குழு மற்றும், இசைக்குழு லஷ்மன் ஸ்ருதி இசைப்பொருட்கள் விற்பனையகமும் நடத்தி வருகிறார். இவர்களின் இசைக்குழு நேற்று மாலை சென்னை காமராஜர் அரங்கில் இசைக்கச்சேரி நடத்தியது. ஏராளமானோர் இசைக் கச்சேரியை ரசித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கிருந்து இடையிலேயே கிளம்பிச் சென்ற ராமன், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அசோக் நகரில் உள்ள தனது வீட்டில் ராமன்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

ராமன் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.