எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் லட்சுமி மேனன் .கடைசியாக விஜய் சேதுபதியின் றெக்க படத்தில் தான் நடித்திருந்தார்.

அதன்பின் தன் கல்லூரி படிப்பை தொடர்ந்து வருவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் லக்ஷ்மி மேனன்.

முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் தான் லட்சுமி மேனன் ஹீரோயினாக நடிக்கிறார்.

குட்டிப்புலி, கொம்பன் ஆகிய படங்களுக்கு பின் மீண்டும் முத்தையாவும் லட்சுமி மேனனும் இணைந்துள்ளனர்.