பாட்னா:

ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் அக்கட்சியின் தேசிய தலைவராக தொடர்ந்து 10வது முறையாக போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவராக இருப்பவர் லாலு பிரசாத். இந்நிலையில் அக்கட்சியின் புதிய தலைவர் தேர்தலுக்கான போட்டியில் லாலு இடம் பெற்றார்.

அவரை தவிர அந்த பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை. வேட்பு மனுவை வாபஸ் பெறும் நேரம் முடிவடைந்ததனை தொடர்ந்து அக்கட்சியின் தேசிய தேர்தல் அதிகாரி ஜகதானந்த் சிங், லாலு தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என இன்று அறிவித்துள்ளார்.

எனினும், தலைவர் தேர்வு செய்யப்பட்டது பற்றி முறைப்படி நவம்பர் 20ந்தேதி சிங் அறிவித்திடுவார்.ராஷ்டீரிய ஜனதா தள கட்சியை தனியார் அரசியல் கட்சி மற்றும் ஒரு குடும்ப அரசியல் சொத்து என பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார் இன்று குறிப்பிட்டுள்ளார்.