பீகார்:
தீவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார்.

ஆனால் தும்கா கருவூல வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால் அவர் சிறையிலேயே இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாமின் பெறுவதற்காக இரண்டு தனிப்பட்ட பாத்திரங்களுக்கும் தலா 50,000 ரூபாய் கொடுத்து பின்பு, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவிடம் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சை பெற்ற இவர் தன்னுடைய மருத்துவ அறிக்கைகளையும் கொடுக்கும்படி கோரியுள்ளார்.

லாலு பிரசாத் யாதவ் பிஹாரின் முதலமைச்சராக இருக்கும்போது 1992-93 ஆம் ஆண்டில் சைபாசா மாவட்ட கருவூலத்திலிருந்து ரூபாய் 33.6 7 கோடி மோசடி செய்துள்ளார்.

மேலும் 1990-களில் பல கோடி ரூபாய் தீவன வழக்கில் ஈடுபட்டதாக 2018-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் நாள் ராஞ்சியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவ் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா ஆகியோரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஜெகன்னாத் மிஸ்ரா ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் மொத்தமாக ஐம்பது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 72 வயதாகும் லாலு பிரசாத் யாதவ் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.