ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஹன்ட்வாராவில் கொல்லப்பட்ட தீவிரவாதி, லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் கமாண்டர் என்பது தெரியவந்துள்ளது.

காஷ்மீரின் ஹன்ட்வாராவில், இந்தியப் பாதுகாப்பு படைகளின் சார்பில் தீவிரவாத தேடுதல் வேட்டை மற்றும் என்கவுன்டர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அப்பகுதியில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் யார் என்று விசாரணையில், அவரின் பெயர் நசீர்-வு-தின் என்றும், அவர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் கமாண்டர் என்ற விபரமும் தெரியவந்துள்ளது.

அவர், கடந்த ஏப்ரல் 18ம் தேதி, சோபோர் பகுதியில் 3 சிஆர்பிஎஃப் ஜவான்கள் மற்றும் மே 4ம் தேதி ஹன்ட்வாரா பகுதியில் 3 சிஆர்பிஎஃப் ஜவான்கள் கொல்லப்பட காரணமானவர் என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.