கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் பலர் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் 50 லட்சம் ரூபாய் உதவி தொகையை கொரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட நடன கலைஞர்களுக்கு வழங்கியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு 25 லட்சமும், தினக்கூலி மற்றும் தான் பிறந்த ராயப்புரம் பகுதி ஏழை மக்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்கியுள்ளார்.

மேலும் பிரதமர் நிவாரணத்தொகைக்கு ரூ. 50லட்சமும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ,50 லட்சமும் வழங்கியுள்ளார். மொத்தமாக 3 கோடி ரூபாய் வரை நிவாரணம் வழங்கினார்.

இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் வங்கியில் செலுத்துவதற்காக ராகவா லாரன்ஸ் நிதி திரட்டியுள்ளார். ஃபைவ் ஸ்டார் கதிரேசன்அவரிடம் தனக்கு சம்பள பணத்தில் இருந்து 25 லட்சம் வழங்க கோரியுள்ளார் . தூய்மை பணியாளர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் விவரங்களை கீழ்கண்ட வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புமாறும் இதற்காக மற்ற ஊடக மற்றும் பத்திரிக்கை துறை நண்பர்கள் உதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். வாட்ஸ் அப் எண்: 6382481658