தெலங்கானா

      இந்தியளவில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000 த்தை தாண்டியுள்ள நிலையில் முகக் கவசம் உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளுக்கு அதிகத் தேவை ஏற்பட்டுள்ளது. 

        இச்சூழலில் தெலங்கானாப் பழங்குடியினர்,  அரசு தங்களுக்கு முகக் கவசம் வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி, இலையால் முகக் கவசம் அணிந்து நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

   ரேடியோவில் கொரோனா மற்றும் அதன் தடுப்பு நடவடிக்கைகளை பற்றிக் கேட்டறிந்த பழங்குடி மக்கள் நூதனமாக தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர்.