கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக திரையுலகப் பிரபலங்களும் தங்களுடைய வீடுகள், மண்டபங்கள் உள்ளிட்டவற்றை அரசின் பயன்பாட்டுக்குக் கொடுத்து வருகிறார்கள்

செல்வமணியின் வேண்டுகோளுக்கிணங்க ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவ முன்னணி நடிகர்கள் முன்வந்து சுமார் 15 லட்ச ரூபாய் வசூலாகியுள்ளது.

இந்நிலையில் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன், ஃபெப்சி அமைப்புக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

அருள் சரவணன், அண்மையில் தான் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். தனது முதல் படத்தில் இப்போதுதான் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது