சென்னை:

ண்ணா விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம், என்று அண்ணா நினைவுநாளையொட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வரும், திமுகவை தொற்றுவித்தவருமான  பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது. அதனைத்தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை  சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து  அண்ணா நினைவிடம் வரை அமைதிப் பேரணி  நடைபெற்றது.

பேரணில் திமுக முன்னணியினருடன் நடந்துசென்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், அண்ணா நினைவு தினத்தையொட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது,
 
 அரசியல் அறத்தைப் போதித்த காஞ்சி தந்த வள்ளுவன்- கொள்கை உரம் ஊட்டிய இந்நூற்றாண்டின் தலைவன்- பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவுநாள் இன்று!

அவரை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு? அவரது கொள்கையும், வாழ்வும் என்றும் நம்மை இயக்குகிறது. அண்ணன் விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம்!

என்று பதிவிட்டுள்ளார்.