%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d
நெட்டிசன்:
ம.தி.மு.க. வளைகுடா பொறுப்பாளர் வல்லம் பஷீர் (Vallam Basheer) அவர்களின் முகநூல் பதிவு:
“என் நெருங்கிய நண்பனின் மூத்த சகோதரி  அவர். அண்ணாமலை பல்கலை கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் . தினமும் ஏதாவது கவிதைகளை எழுதி கொண்டிருப்பார் , அதை புத்தகமாக்க வேண்டும் என்று அவருக்கு நீண்ட நாள் ஆசை . தன் ஆசையை லண்டனில் உள்ள கணவரிடம் சொல்ல , அவரும் ஏதேனும் ஒரு பதிப்பகம் மூலம் அந்த கவிதை தொகுப்புகளை புத்தகமாக்க முயற்சி மேற்கொண்டார் .
மூன்று லட்சம் ரூபாய் தந்தால் தன்னுடைய பதிப்பகத்தின் சார்பில் அந்த கவிதை நூலை வெளியிடுகிறேன் என்றார் ஒரு வியாபாரி.  மனைவியின் ஆசையை நிறைவேற்ற மூன்று லட்சம் கொடுத்தார் அந்த அப்பாவி கணவர் . கவிதை தொகுப்பையும் பெற்று கொண்டு இன்று வரை அதை வெளியிடவில்லை அதில் இருந்த பல கவிதைகளை தன்னுடைய புத்தகங்களில், தான் எழுதியாக வெளியிட்டார் அந்த கவிதை திருடர் .
இதை விட கொடுமை அந்த சகோதரியை இரவு நேரங்களில் கைபேசியில் அழைத்து மார்பகங்கள் குறித்து ஒரு கவிதை எழுதினால் எப்படி தொடங்குவது ?  அல்குல் பற்றி கவிதை எழுதினால் எப்படி இருக்கும் ??  என்றெல்லாம் தொடர்ந்து கேட்டவர் . ஒரு நாள் பின்னிரவு ஒன்னரை மணிக்கு அழைத்து காமலீலை என்கிறார்களே அது எப்படியானது என்று கேட்டிருக்கிறார் .
இந்த காமவெறியனின் நோக்கம் அறிந்த அந்த சகோதரி கணவனிடம் இதை சொல்ல முடியாமல் தன் தம்பியிடம் சொல்ல , அவன் என் நெருங்கிய நண்பன் . இதை அப்படியே என்னிடம் சொல்லி கதறினான் . அந்த நாயை ரோட்டில் விட்டு செருப்பால் அடிக்கணும் மாப்ளை என்றான் .
அந்த நாயை அடிக்க நீ ஏன் மாப்ளை இரு என்று சொல்லி என் உறவினரான காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ஒருவர் மூலம் இந்த பிரச்சனையை எதிர்கொண்டோம் . அவரும் வாய்மொழி புகாராக ஏற்றுக்கொண்டு அந்த காம மிருகத்தை அழைத்து வர சொல்லி அடையார் காவல் நிலையத்தில் வைத்து மிரட்டி அனுப்பினார் .
அந்த  :… “ எல்லாம்  இன்று என் தலைவனை பிழை என்று சொல்லும் போது அன்று என் நண்பன் சொன்னதையே இப்போது செய்யலாம் என்று தோன்றுகிறது.”