பகவத்கீதை உரைக்கும் அற்புதமான வாழ்க்கை போதனை… பகுதி 2

நேற்று முதல் பகுதியில் சில போதனைகளை பார்த்தோம்

மேலும் சில  பகவத் கீதை உரைக்கும் வாழ்க்கை போதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

இன்று  இரண்டாம் பகுதி

  1.    மக்களில் பலர் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
  2. “அவரவர்வாழ்வு,அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
  3. இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு.
  4. ஆனால்,நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
  5. “எல்லாமேநான்இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
  6. எனவே,கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
  7. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
  8. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
  9. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
  10. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
  11. நண்பர்களிடம் அளவளாவு.
  12. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
  13. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
  14. வாழ்வை கண்டு களி!
  15. ரசனையோடு வாழ்!
  16. வாழ்க்கை வாழ்வதற்கே!நாளை மூன்றாம் பகுதியில் மேலும் சில போதனைகளை காண்போம்