முடியே இல்லாமல் சீப்புக்கு சண்டையிடும் வழுக்கை தலையர்கள் என்று திரையுலக பிரச்சினை இந்தி நடிகை பூஜா பட் கடுமையாக சாடியுள்ளார். பார்வையாளர்கள் எங்கே என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் திரையுலகமும் மொத்தமாக முடங்கி உள்ளதால்,  சினிமா வர்த்தகமும் கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது.  தற்போது ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தியேட்டர்கள் திறக்க அனுமதி  மறுக்கப்பட்டுள்ளதால், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, தற்போது சில தயாரிப்பாளர்கள் இணையதளம் மூலம் படங்களை ரிலிஸ் செய்து வருகின்றன்ர். இது திரையுரங்க உரிமையாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில்தான் பிரபல இந்திபட நடிகையான பூஜாபட் இன்று ஒரு டிவிட் பதிவிட்டு உள்ளார்.

தலையில் முடியே இல்லாத வழுக்கை தலை உடைய 2 பேர், தங்களது தலையை  வார (சீவ)  சீப்புக்கு சண்டையிடுகின்றனர் என,  தயாரிப்பாளர்கள்- திரையரங்கு உரிமையாளர் களிடையே  நடைபெற்று வரும் மோதல் குறித்து  கலாய்த்து பார்வையாளர்கள் எங்கே என்ற முக்கிய கேள்வியை எழுப்பி உள்ளார்.

அத்துடன்  ‘ரியாலிட்டி ஃபைட்ஸ்’ என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி தனது ட்வீட்டை முடித்துள்ளார்.

அவரது டிவீட் நிறைய எதிர்வினைகளை ஈர்த்துள்ளது. சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிலர் இரு தரப்பினரும்  ” முடி வளர்ச்சியை எதிர்பார்க்கிறார்கள்”  என்று கலாய்த்துள்ளனர்.

மற்றொருவர், “பார்வையாளர்கள் தங்கள் வீட்டில் இருக்கிறார்கள். இப்போது பார்வையாளர்கள் தங்கள் டிவி, மடிக்கணினிகள், மொபைல்கள், ஐபாட், கணினிகளில் பொழுதுபோக்குகளை விரும்புகிறார்கள்.

உடல்நலக் காரணங்கள் மற்றும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக பார்வையாளர்கள் அடுத்த சில மாதங்களில் திரையரங்குகளுக்குச் செல்ல மாட்டார்கள் என்று தெரிவித்து உள்ளர்.

இந்த விவகாரம் தொடர்பாக  தயாரிப்பாளர்கள் மற்றும் கண்காட்சியாளர்கள் இதற்கு ஒரு நடுநிலையான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.