simbu-linguswamy
எதிர்பார்த்தது, எதிர்பாராதது எல்லாமே சிம்புவின் வாழ்க்கையில் நடந்து முடிந்துவிட்டது. இனி எல்லாம் சிவ மயம் என்று இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்கிறார் சிம்பு. குருட்டு பூனை விட்டத்துல பாஞ்சது மாதிரி அவசரம் அவசரமாக சிம்புவிடம் 1 கோடி கொடுத்து கால்ஷீட் புக் செய்து வைத்திருந்தார் திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி.
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்த இவர்களின் கூட்டணி திருப்பதி பிரதர்ஸ்க்கு கடுமையான நிதி நெருக்கடி வரும்போது குற்றச்சாட்டாக வெளியிட்டார்கள். அதாவது, சிம்பு திருப்பதி பிரதர்ஸ்க்கு ஒரு படம் நடித்து கொடுக்க சொல்லி 1 கோடி அட்வான்ஸ் கொடுத்தோம் அதனை திருப்பி பெற்று தாருங்கள் என்று தயாரிப்பாளர் சங்கம் வரை நீண்டது பிரச்சனை.
ஆனால் அதற்கோ சிம்புவின் தரப்பு கூறிய பதிலும் கொஞ்சம் ஏற்றுக் கொள்ள கூடயதாகவே இருக்கிறது. அவர்கள் கூறியிருந்ததாவது “பணம் திரும்ப தர முடியாது, வேண்டுமானால் படத்தை ஆரம்பியுங்கள் ஒரே கால்ஷீட்டாக நடித்து கொடுத்துவிடுகிறேன் என்பதுதானாம் அது”. அடுத்த பட தயாரிப்பு வேலைகளில் இறங்கிவிட்டது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம். விரைவில் லிங்குசாமி – சிம்பு இணைவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போ சண்டைகோழி 2 டிராப்ப்ப்ப்ப்பா….