சிவகங்கை:
தேவகோட்டையில் தாய், தந்தையை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு மகன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, ராம்நகரை சோ்ந்தவா் மகாலிங்கம். ஓய்வு பெற்ற வட்டாச்சியா். இவரது மனைவி சுசிலா ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களுக்கு சந்தானம் என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

பெற்றோருடன் சந்தானம்
பெற்றோருடன் சந்தானம்

மூவருக்கும் திருமணமானகி, , அனைவரும் தேவகோட்டையிலேயே தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர். மகன் சந்தானம் ராம்நகர் பகுதியிலேயே கோழிக் கடை நடத்தி வருகிறார்.
அவருக்கு மதுப்பழக்கம் உண்டு. அவ்வப்போது, தனது பெற்றோரிடம் வந்து குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வார்.
நேற்றும் தனது தந்தை வீட்டிற்கு வந்த சந்தானம் பணம் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார். பெற்றோர் பணம் கொடுக்க மறுத்திருக்கிறார்கள்.
இதில் ஆத்திரம் அடைந்த சந்தானம் அருகில் இருந்த அரிவாளை எடுத்து, தாய், தந்தையை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர் அளித்த  தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினா், கொலை செய்யப்பட்டு கிடந்த தம்பதியினரை  பிரேத பரிசோதனைக்காக, தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து  தப்பி ஓடிய சந்தானத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.