டெல்லி: 10,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று கொண்ட நகரங்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையானது 2 லட்சத்தை  நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் ​​சில நகரங்களும் மாவட்டங்களும், அதன் எண்ணிக்கையால் தனித்து நிற்கின்றன.

மிக மோசமான மாநிலமான பாதிக்கப்பட்டது மகாராஷ்டிரா. கொரோனா இந்தியாவில் அறியப்பட்டதில் இருந்து அங்கு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தலைநகர் மும்பை தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஒன்றாகும்.

மகாராஷ்டிராவின் தலைநகரில் இதுவரை 41,206 கொரோனா தொற்றுகள் பதிவாகி உள்ளன. மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கிய தரவுகளின்படி, கடந்த இரண்டு நாட்களில் நகரத்தில் 4,284 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் அடையாளம் காணப்பட்ட சில ஹாட்ஸ்பாட்களில் ஒன்று தாராவி சேரிபகுதியாகும். அங்கு கொரோனா ஒரு பெரிய பிரச்சினையாக மாறும். 1,333 இறப்புகளுடன், மும்பை அனைத்து பகுதிகளை விட அதிக இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.

தமிழக தலைநகரம் மற்றும் தென்னிந்தியாவின் ஒரு பெரிய நகரம் சென்னை. அதிக கொரோனா தொற்றுள்ள நகரங்களின் எண்ணிக்கையில் அடுத்த இடத்தில் உள்ளது. அரசாங்க தரவுகளின்படி, சென்னையில் 14,800 தொற்றுகள் உள்ளன. மும்பையின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவானது. கொரோனா வைரசால் 132 இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் மாவட்டத்தில் 1,420 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

குஜராத்தின் தலைநகர் அகமதாபாத் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளது. மாவட்டத்தில் 12,180 தொற்றுகள் உள்ளன, ஆனால் இறப்புக்கள் வரும்போது, ​​இந்த எண்ணிக்கை சென்னையை விட அதிகமாக உள்ளது. அகமதாபாத்தில் இறப்புகளின் எண்ணிக்கை 842 ஆகும்.

கொரோனா வேகமாக பரவிய மகாராஷ்டிராவின் 2வது நகரம் தானே. இங்கு கொரோனா வைரசால் 10,488 பேர் பாதிக்கப்பட்டு, 227 இறப்புகளும் பதிவாகி உள்ளன. மிகவும் கவலையான உண்மை என்னவென்றால், கடந்த இரண்டு நாட்களில் 2,405 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவின் 3வது பகுதியாக புனேவில் தொற்று அதிகம். இங்கு 8560 தொற்றுகள் உள்ளன. 88 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. கடந்த இரண்டு நாட்களில், இந்த எண்ணிக்கை 6,737 இலிருந்து 8,560 ஆக உயர்ந்தது.

இந்த 5 மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களில் 54 சதவீத புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. மத்திய பிரதேசத்தில் இந்தூர் (3,449), மேற்கு வங்கத்தில் கொல்கத்தா (2,167) மற்றும் ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் (2,029) ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மற்ற நகரங்கள் ஆகும்.