சாஹ்தோல்: மத்திய பிரதேசத்தில் பாஜக முக்கிய பிரமுகர் உள்பட 4 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அம்மாநிலத்தின் தலைநகர் போபாலில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சாஹ்தோல் மாவட்டம். இங்குள்ள 20 வயது இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டு, பண்ணை வீட்டில் 2 அடைத்து வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்த சம்பவத்தை விவரிக்கும் அப்பெண்ணின் உறவினர்கள், பாதிக்கப்பட்ட பெண் உள்ளூர் பாஜக பிரமுகர் உள்பட 4 பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்து உள்ளனர். மளிகை பொருட்கள் வாங்க அந்த பெண் கடத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.

வெளியில் சென்றவர் வீடு திரும்பாததால் உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்று எண்ணியதாகவும், அதனால் போலிசில் புகார் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். காவல்துறையில் புகார் அளித்த சில மணி நேரங்களில் அவரது வீட்டுக்கு அருகில் மயங்கிய நிலையில் அப்பெண் மீட்கப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவத்தில் ஜெய்த்பூர் பாஜக தலைவர் விஜய் திரிபாதி, அவருடன் இருக்கும் 3 பேர் மீது பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இது குறித்து பெண்ணின் உறவினர் ஒருவர் கூறியதாவது: அவர்கள் 4 பேரும் பெண்ணை காரில் கடத்திச் சென்றனர். காவல்துறையில் அளித்த புகாரை தொடர்ந்து, அவளை வீட்டிற்கு வெளியே தள்ளிவிட்டு சென்றுவிட்டனர் என்று கூறி உள்ளனர்.