சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை அதிமுக தலைமையகத்தில் நடைபெற உள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது. தற்போது, உச்சநீதி மன்ற உத்தரவு காரணமாக, தேர்தல் தேதி குறித்த அறிவிப்பானை வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள், கூட்டணி கட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடு தொடர்பாக, அதிமுக தலைமை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, இன்று மாலை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  நடைபெறுகிறது.