சென்னை:

மிழகத்தின் ஊரகப்பகுதிகளில் நடைபெற உள்ள முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் வரும் 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. முதல்கட்ட தேர்தல் நடக்கும் 156 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று மாலையும் பிரசாரம் ஒய்கிறது.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து, 27 மாவட்டங்களில் உள்ள ஊரகப்பகுதிகளுக்கு 2 கடடமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.டி அதன்படி முதல்கட்ட தேர்தல் வரும் 27ந்தேதியும், 2வது கட்ட தேர்தல் வரும் 30-ம் தேதியும் நடைபெற உள்ளது.

தேர்தலில் போட்டியிட 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பரிசீலனையின்போது 3,643 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 48,891 வேட்பாளர்கள் மனுவை திரும்பப்பெற்ற நிலையில், 18,570 பதவி களுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தற்போது 2 லட்சத்து 31,890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறையாக பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது. நாளை (26-ம் தேதி) காலை தேர்தல் அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள் மற்றும் இதர பொருட்களுடன் வாக்குச்சாவடி அலுவலர்கள் அனுப்பி வைக்கப்படுவர்.

27-ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை5 மணி வரை நடக்கிறது. வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

27 மாவட்டங்களில் பொது விடுமுறை

மாநில தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் 27-ம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் உள்ளாட்சிப் பகுதிகள் மற்றும் டிச.30-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு செலாவணி முறிச்சட்டப்படி பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இதன்படி, இப்பகுதிகளில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் என்று  கூறப்பட்டுள்ளது.