சென்னை:

மிழக உள்ளாட்சி தேர்தலை மே மாதம் 14ந்தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அடோபர் மாதம்  24-ந் தேதியுடன் முடி வடைந்தது.  அதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 17, 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், இடஒதுக்கீடு சரிவர பின்பற்றவில்லை என்று திமுக வழக்கு தொடர்ந்ததையடுத்து உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் தேர்தல் குறித்த விசாரணையின்போது பல்வேறு காரணங்களை கூறி, அவகாசம் தேவை உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசும், தமிழக தேர்தல் ஆணையமும் தாமதப்படுத்தி வந்தன.

இந்நிலையில் கடந்த 17ந்தேதி நடைபெற்ற இறுதி விசாரணையின்போது அரசாணை குறித்து நீதிபதிகள்  தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பினர். 20ந்தேதி இறுதி முடிவு அறிவிக்க வேண்டும் என  தமிழக தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

அதன்படி நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, தமிழகத்தில் மே 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் கூறியது.

அதற்கு நீதிபதிகள் உள்ளாட்சி , உத்தேச தேதியை கூற வேண்டாம். எப்போது தேர்தலை நடத்த முடியும் என்ற உறுதியான தகவல்களை கூறும்படி நீதிபதிகள் கேட்டனர்.

அதைத்தொடர்ந்து இன்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக தேர்தல் ஆணையம்  மே 15க்கு முன்பு உள்ளாட்சி தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என தெரிவித்தது.

தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  தேர்தல் நடவடிக்கைகளை ஏப்ரல் 15ந் தேதிக்குள் தொடங்கி மே 14க்குள்  இரண்டு கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர்.