டெல்லி:
ரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் பிரதமர் மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 4 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது நாளையுடன் (31ஆம் தேதி)  முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து, பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்ர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் சில மாவட்டங்கள் உள்பட நாடு முழுவதும் சுமார் 13 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடில்லாமல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சில மாநில அரசுகள் ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில்,   ஊரடங்கை தளர்த்துவதா அல்லது நீடிப்பதா என்பது குறித்து பிரதமருடன் அமித்ஷா முக்கிய ஆலோசனை நடத்தியதாக  தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் 5வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.